Posts

Showing posts from March, 2022

கமலஹாசன் உச்சத்தில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.. வியந்து பாராட்டிய பிரபல நடிகை

Image
பல குணச்சித்திர கதாபாத்திரத்திலும் அம்மா கதாபாத்திரத்திலும் திரைப்படங்களில் நடித்து பல ரசிகர்களைக் கொண்டவர் நடிகை அந்த நடிகை. 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் சுஜாதா சிவகுமார், தற்போது தான் கடந்து வந்த பாதையைப் பற்றி கூறியிருக்கிறார். மதுரையில் பிறந்த நடிகை சுஜாதா சிவக்குமார் நம் அனைவரின் வீட்டில் உள்ள சித்தி, அம்மா, அத்தை போன்று உரிமையாகவும் எதார்த்தமாகவும் மதுரை ஸ்லாங்கிலும் தன் தனித் தன்மையான குரலாலும் பேசி ரசிகர்களை கவர்ந்தவர். இவரது முதல் படம் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான விருமாண்டி திரைப்படம். பேச்சு எனும் கதாபாத்திரத்தின் மூலமாக தன்னுடைய நடிப்புத் திறமையை... விரிவாக படிக்க >>

சென்னை நந்தனத்தில் மின்னணு நிறுவனத்தின் மின்னணு கொள்முதல் வலைத்தளத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்

Image
சென்னை: மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மின்னணு கொள்முதல் வலைத்தளத்தை தொடங்கி வைத்தார். சென்னை, நந்தனம், தமிழ்நாடு மின்னணு (ELCOT) நிறுவனத்தில் இன்று (31.03.2022) மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் அவர்கள் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் சேவைகளை மேம்படுத்துவதற்கும், உரிய நேரத்தில் சேவைகளை வழங்குவதற்கும் உருவாக்கப்பட்டுள்ள மின்னணு கொள்முதல் வலைத்தளத்தை (Procurement Portal) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் நீரஜ் மித்தல், இ.ஆ.ப., தமிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண்மை இயக்குநர் திரு. அஜய் யாதவ், இ.ஆ.ப., செயல் இயக்குநர் திரு. எஸ். அருண்ராஜ், இ.ஆ.ப. ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மின்னணு... விரிவாக படிக்க >>

தங்கம் விலை உயர்வு, வெள்ளி விலை சரிவு: இன்றைய சென்னை நிலவரம்!

Image
தங்கம் விலை உயர்வு, வெள்ளி விலை சரிவு: இன்றைய சென்னை நிலவரம்! தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 3ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 24ம் உயர்ந்துள்ளது நகை பிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4790.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 3 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4793.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 38320.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 24 உயர்ந்து ரூபாய் 38344.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5192.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41536.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 3ம், ஒரு சவரன் ரூபாய் 24ம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கத

13 மணி நேர மின்வெட்டு

Image
13 மணி நேர மின்வெட்டு நாடளாவிய ரீதியில் இன்றைய தினம்(31) 13 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, ⭕ A,B,C,D,E மற்றும் F ஆகிய வலயங்களில் அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கும் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரையில் 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 06 மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. ⭕ G,H,I,J,K மற்றும் L ஆகிய வலயங்களில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 06 மணித்தியாலங்களுக்கும் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. ⭕ P,Q,R மற்றும் S ஆகிய வலயங்களில் அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 06 மணித்தியாலங்களுக்கும் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. ⭕ T,U,V மற்ற

‘டாணாக்காரன்’ டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது

Image
‘டாணாக்காரன்’ டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது இதையும் படிங்க ஆசிரியர் விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக முத்தையா இயக்கத்தில் ‘புலிக்குத்தி பாண்டி’ படம் வெளியானது. இப்படம் நேரடியாக டி.வி.யில் வெளியானது. தற்போது ‘டாணாக்காரன்’ படத்தில் விக்ரம் பிரபு நடித்து முடித்திருக்கிறார். டாணாக்காரன் படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ் என்பவர் இயக்கி இருக்கிறார். சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பான காவல்துறையினரை ‘டாணாக்காரன்’ என்றுதான் அழைப்பார்கள். போஸ்டரிலும் விக்ரம் பிரபு அதே கெட்டப்பில் இருக்கிறார். தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதை என்பதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். மகேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  டாணாக்காரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நரிக்குறவர் இல்லத் திருமண விழாவுக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர்

Image
நரிக்குறவர் இல்லத் திருமண விழாவுக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் அரசு விழா ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன், விளையாட்டுத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை  அமைச்சர் மெய்யநாதன் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக திருமண பேனர் ஒன்று அடிக்கப்பட்டிருந்தது. அதில், அமைச்சர் மெய்யநாதனின் உருவப்படமும் இருந்துள்ளது. இதனை காரில் இருந்தபடி கவனித்த அமைச்சர், வண்டியை நிறுத்தச்சொல்லியுள்ளார். பேனரை உற்றுநோக்கினால், அது நரிக்குறவர்கள் இல்லத் திருமண விழா. உடனடியாக திருமணம் நடைபெறும் வீட்டிற்கு அமைச்சர் மெய்யநாதன் சென்றார். திருமண வீட்டில் படு பிஸியாக இருந்த நரிக்குறவர்கள் அமைச்சர் வருவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.  மேலும் படிக்க | தீபாவளி தினத்தில் சிறப்பான நிகழ்வு; தேடி சென்று உதவி செய்த முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியோடு வரவேற்ற அமைச்சரை, மணமக்களிடம் அழைத்துச் சென்றனர். அங்கு மணமக்களை வாழ்த்திய அமைச்சர் மெய்யநாதன், அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து அரசு விழாவுக்குச் செல்ல வேண்டும் என்று

சென்னையில் 2 ஆம் விமான நிலையம் விரைவில்!

Image
சென்னையில் 2 ஆம் விமான நிலையம் விரைவில்! நேற்று போபால் சென்னை – போபால் நேரடி விமான சேவையை, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதித்ராதிய சிந்தியா, இணை அமைச்சர் விகே சிங் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  இதன் தொடக்க விழாவில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ஜோதித்ராதித்ய சிந்தியா, “அடுத்ததாக சென்னைக்கும் இரண்டாவது விமான நிலையத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டு உள்ளோம்.  இதற்காக 4 இடங்களை மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. அந்த 4 தளங்களிலிருந்து, நாங்கள் பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய 2 தளங்களைத் தேர்ந்தெடுத்து, மாநில அரசின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.   சரியான இடம் இறுதி செய்யப்பட்ட பின் இரண்டாவது விமான நிலையப் பணிகள் விரைந்து முடிப்போம்.” என தெரிவித்தார். மேலும் படிக்க | ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் எண்ணெய்: அமரிக்கா கூறுவது என்ன! இதன்படி மாநிலக் குழுவானது, பன்னூர், பாரந்தூர், திருப்போரூர், படலம் ஆகிய நான்கு இடங்களை பரிந்துரைத்து, அதை ஆய்வு செய்த மத்திய குழு பன்னூர் அல்லது பரந்தூருக்கு சம்மதம் தெரிவித்திருப்பது தெரிய வருகிறது. பன்னூர் கிராமம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. த

'KGF- 2' வை பாக்க நீங்க ஃபிட்டான ஆளா!? செக் பண்ணிக்க இதைப் படிங்க!

Image
'KGF- 2' வை பாக்க நீங்க ஃபிட்டான ஆளா!? செக் பண்ணிக்க இதைப் படிங்க! இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் முதல் பாகம் பெரும் கவனத்தைப் பெற்றது. சமீப காலத்தில் பாகுபலிக்குப் பிறகு தென்னிந்தியத் திரைப்படம் ஒன்று இந்திய அளவில் பேசப்பட்டது என்றால் அது கேஜிஎஃப்தான் என உறுதியாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு ஓவர் நைட்டில் உலக வெவல் பாப்புலர் ஆனது அப்படம். இதையடுத்து இதே கூட்டணியில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. வருகிற 14ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆகவுள்ள இப்படம் வசூலில் பெரும் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கே.ஜி.எஃப்-2 படத்தின் சென்சார் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, பீரியட் ஆக்சன் படமான இப்படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க| ‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா?                                                   அந்த வகையில், 18 வயது நிரம்பியவர்கள் இந்தப் படத்தைக் கண்டுகளிக்கலாம். 12 வயதுக்கு குறைவான சிறார்கள், பெற்றோர்களின் வழிகாட்டுதலின்படி

"ஓரின சேர்க்கையை" போற்றும் ராம் கோபால் வர்மாவின் "டேன்ஜரஸ்" படம் சர்ச்சையில்!

Image
"ஓரின சேர்க்கையை" போற்றும் ராம் கோபால் வர்மாவின் "டேன்ஜரஸ்" படம் சர்ச்சையில்! ரத்த சரித்திரம், வீரப்பன் போன்ற பல ஹிந்தி, தெலுங்கு படங்களை இயக்கியவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவர் டிராமா படங்கள், பேய் படங்கள், சர்ச்சையை கிளப்பும் படங்கள் என பலவகை படங்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து இயக்குநர் ராஜமௌலியை டாக் செய்து டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ராஜமௌலி சாரிடம் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் போன்ற டேன்ஜரஸ்ஸான ஆண்கள் இருப்பதுபோல் தன்னிடம் நைனா கங்குலி, அப்சரா ராணி ஆகிய டேன்ஜரஸ் பெண்கள் உள்ளனர் என்று ஒரு புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்னவென்றால், ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நைனா கங்குலி, அப்சரா ராணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள "டேன்ஜரஸ்" என்ற தெலுங்கு படம் தமிழில் "காதல் காதல்தான்" என்ற தலைப்புடன் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது.  மேலும் படிக்க | சர்ச்சையைக் கிளப்பிய மன்மத லீலை: எஸ்.ஜே.சூர்யாவைக் கை காட்டும் வெங்கட் பிரபு இப்படத

சாமி தரிசனம் செய்த அஜித்!- தீயாகப் பரவும் வைரல் புகைப்படங்கள்!

Image
சாமி தரிசனம் செய்த அஜித்!- தீயாகப் பரவும் வைரல் புகைப்படங்கள்! வலிமை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித், ஹெச்.வினோத் இயக்கும் மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளார். அவரது 61 ஆவது படமான இப்படத்துக்கு பின்னர் விக்னேஷ்  சிவனுடன் அவர் இணையவுள்ளார். 62ஆவது படமான இதில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.                                                                அடுத்தடுத்த படங்களில் அஜித் பிஸியாக இருந்துவரும் நிலையில் கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் அவர் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகிவருகின்றன. கேரளாவில் உள்ள கோவில் ஒன்றுக்கு  இன்று அதிகாலையில் அஜித் சென்றிருந்ததாகவும் அப்போது அவர் தரிசனம் செய்த புகைப்படங்கள்தாம் இவை எனவும் சொல்லப்படுகிறது.  மேலும் படிக்க | அஜித்துக்கு சம்பளம் இத்தனை கோடியா?! - ஆச்சர்யத்தில் கோலிவுட்!                                                நீண்ட தாடி, மீசையுடன் வெள்ளை நிற வேட்டி மற்றும் துண்டுடன் அஜித் காட்சியளிக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு அஜித், தனது குடும்பத்துடன் எடுத்

டெல்லி : பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

Image
டெல்லி : பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு! டெல்லியில் திமுக அலுவலகமான அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்களை அழைக்க திமுக திட்டமிட்டுள்ளது.  இதற்கான அழைப்பிதழ்களை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையம் சென்றடைந்த அவருக்கு நள்ளிரவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். ஏராளமான திமுகவினர் திரண்டு மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இன்று காலை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள திமுக அலுவலகத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு திமுக எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அங்கு திடீரென வந்த சோனியா காந்தி முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர்.  மேலும் படிக்க | MK Stalin டெல்லி பயணம்: பிரத

2 தலை, 3 கைகளுடன் பிறந்த குழந்தை

Image
2 தலை, 3 கைகளுடன் பிறந்த குழந்தை மத்தியப் பிரதேச மாநிலம் , ரத்லம் அருகேயுள்ள ஜவ்ரா பகுதியை சேர்ந்த இளம்பெண் பிரசவத்திற்காக ரத்லம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 தலை, 3 கைகளுடன் கூடிய குழந்தை பிறந்தது. ஆபத்தான நிலையில் இருந்த அந்த குழந்தை, குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இந்தூரில் உள்ள எம்.ஒய். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சோனோகிராஃபி சோதனையின்போது குழந்தை இரட்டைக்குழந்தை யைப் போல் தோற்றமளித்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க | போபால் விஷ வாயு கசிவு நடந்து 36 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்கிறது நீதிக்கான போராட்டம் குழந்தையின் உடல்நிலை தற்போது சீராக இருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக எம்.ஒய். மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அக்குழந்தைக்கு Dicephalic Parapagus எனும் பாதிப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Dicephalic Parapagus என்பது இரட்டைக்குழந்தைகள் கருப்பையில் முழுமையாக உருவாகாத நிலை ஆகும். இந்த பாதிப்பு உள்ள பெரும்பாலான குழந்தைகள் தா

தோனியின் முடிவால் உடைந்து போனேன் - சிஎஸ்கே வீரரின் ஆதங்கம்

Image
தோனியின் முடிவால் உடைந்து போனேன் - சிஎஸ்கே வீரரின் ஆதங்கம் தோனி ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு இந்த அறிவிப்பை வெளியிட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தார். இந்த சிஎஸ்கே அணியில் முதல் முறையாக ஆட ஒப்பந்திக்கப்பட்டார் நியூசிலாந்தின் இடது கை தொடக்க வீரர் டெவன் கான்வே. இவரை சிஎஸ்கேவுக்கு ஆடும் இன்னொரு மைக் ஹஸ்ஸி என்றே பலரும் வர்ணிக்கின்றனர், ஆனால் அவர் முதல் போட்டியில் அன்று சொதப்பினார். இன்று லக்னோவுக்கு எதிராக ஒரு காட்டு காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம். இவர் தோனியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாரே தவிர நேரில் பார்த்ததில்லை, நேரடியாக அனுபவித்ததும் இல்லை, எனவே தோனியின் கேப்டன்சியில் ஆடப்போகிறோம் என்று ஆவலாகவே இருந்தார் டெவன் கான்வே. தோனி கேப்டன்சியின் கீழ் விளையாடுவது என்பது தன்னுடைய கனவு எனத் தெரிவித்துள்ள அவர், அந்த ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கையில் இருந்ததாக கூறியுள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் தோனி எடுத்த முடிவு தன்னுடைய இதயத்தை நொறுக்கியதாக குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது. சிஎஸ்கே அணிக்கு ஆடும் ய

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா - இந்த 10 நிமிட வொர்கவுட் செய்யுங்க

Image
கோவிட்-19 தொற்று வெகுவாக குறைந்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. எனினும் சில அலுவலக ஊழியர்கள் இன்னும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணிகளை தொடர்ந்து வருகின்றனர். வீட்டிலிருந்தே வேலை செய்வது வசதியாக இருந்தாலும் பலரின் உடலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுப்பற்றி கருத்து தெரிவித்து உள்ள பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் அலுவலக வேலைகள் காரணமாக தொலைபேசிகள் மற்றும் லேப்டாப்களில் தொடர்ந்து பயன்படுத்தியபடியே நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் தலை மற்றும் கழுத்து பகுதிகள் நிறைய பாதிப்புகளை சந்திப்பதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக அடிவயிற்றில் தொப்பை விழுவதோடு, மார்பு பகுதி சரிந்து முதுகு சுருண்டு போவதாக கூறுகிறார் ருஜுதா திவேகர். நீண்ட நேரம்... விரிவாக படிக்க >>

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை: பிம்ஸ்டெக் மாநாட்டில் எஸ்.ஜெய்சங்கா் பேச்சு

Image
விரிவாக படிக்க >>

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு புதுச்சேரி அரசு கேளிக்கை வரிவிலக்கு அளித்து உத்தரவு

Image
காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு புதுச்சேரி அரசு கேளிக்கை வரிவிலக்கு அளித்து உத்தரவு

29 மார்ச் 2022 மேஷம் ராசி

Image
29 மார்ச் 2022 மேஷம் ராசி இன்று சிறப்பான நாள். உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும் நாள். புதியதொடர்புகள் கிடைக்கும். நட்பு வட்டராம் விரிவடையும். பணியில் முன்னேற்றம்காணப்படும். பணியில் கிடைக்கும் புதிய வாய்ப்புகள் காரணமாக மகிழ்ச்சியாகஇருப்பீர்கள். இன்று பணம் அதிகமாக காணப்படும். பணத்தை பயனுள்ள வகையில்பயன்படுத்துவீர்கள். நீங்கள் இன்று மகிழ்ச்சியான மன நிலையில்காணப்படுவீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

டில்லியில் 15 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

\"குழந்தையை புதைக்க இடம் தர மாட்றீங்க! என்னயா கிறிஸ்டியன் நீங்க..?\" - தாய் கண்ணீர் பேட்டி

Image
\"குழந்தையை புதைக்க இடம் தர மாட்றீங்க! என்னயா கிறிஸ்டியன் நீங்க..?\" - தாய் கண்ணீர் பேட்டி

தேர்வு எழுதும் போது மாரடைப்பு. வகுப்பிலேயே சுருண்டு விழுந்து பலியான மாணவி. அதிர்ச்சி வீடியோ

Image
தேர்வு எழுதும் போது மாரடைப்பு. வகுப்பிலேயே சுருண்டு விழுந்து பலியான மாணவி. அதிர்ச்சி வீடியோ

தமிழகத்தில் நாளை மீண்டும் பந்த் பஸ் ஆட்டோ ஓடாது | Strike news in tamilnadu | Today breaking news

Image
தமிழகத்தில் நாளை மீண்டும் பந்த் பஸ் ஆட்டோ ஓடாது | Strike news in tamilnadu | Today breaking news

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா,எஸ்.சௌந்தர் பதவியேற்பு

Image
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக  என்.மாலா மற்றும் எஸ். சௌந்தர் ஆகியோர் பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலிபணியிடங்கள் எண்ணிக்கையை நிரப்பும் வகையில் ஆறு வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது. ஆறு பேரில் என்.மாலா மற்றும் எஸ். சௌந்தர் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி  இருவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை...வேலை நிறுத்தத்தால் மக்கள் அவதி

Image
தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை...வேலை நிறுத்தத்தால் மக்கள் அவதி விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது  உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்கங்கள் இன்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தினால் பேருந்துகள் மிகக்குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன. வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில்  67% பேருந்துகள் இயங்கவில்லை என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி15,335 பேருந்துகள் இயங்க வேண்டிய நிலையில் 5,023 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வெறும் 10 சதவீதம் பேருந்துகளே இயக்கப்பட்டன. சென்னையில் 3,175 பேருந்துகளில் 318 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வேலைக்கு செல்பவர்களும், மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு , அரக்கோணம், ஆவடி உள்ளிட்ட  புற நகர்களிலிருந்து தினந்தோறும் பல்லாயிரக்க

Public Opinion on Petrol Diesel Price Hike | \"பெட்ரோல் விலை அதிகரித்தால் நாங்கள் சிரமப்படுவோம்\"

Image
Public Opinion on Petrol Diesel Price Hike | \"பெட்ரோல் விலை அதிகரித்தால் நாங்கள் சிரமப்படுவோம்\"

15 வயது சிறுமியிடம் அத்துமீறல் - இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் நடந்த விபரீதம்

Image
15 வயது சிறுமியிடம் அத்துமீறல் - இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் நடந்த விபரீதம்

வெற்றி கணக்கை துவக்கியது KKR | | | | |...

Image
வெற்றி கணக்கை துவக்கியது KKR | | | | | | | |

தமிழகத்தில் இன்று முதல் கனமழை எச்சரிக்கை 14 மாவட்டங்கள் உஷார்!. | today rain news tamil | TN rain

Image
தமிழகத்தில் இன்று முதல் கனமழை எச்சரிக்கை 14 மாவட்டங்கள் உஷார்!. | today rain news tamil | TN rain