சென்னை நந்தனத்தில் மின்னணு நிறுவனத்தின் மின்னணு கொள்முதல் வலைத்தளத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்



சென்னை: மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மின்னணு கொள்முதல் வலைத்தளத்தை தொடங்கி வைத்தார். சென்னை, நந்தனம், தமிழ்நாடு மின்னணு (ELCOT) நிறுவனத்தில் இன்று (31.03.2022) மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் அவர்கள் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் சேவைகளை மேம்படுத்துவதற்கும், உரிய நேரத்தில் சேவைகளை வழங்குவதற்கும் உருவாக்கப்பட்டுள்ள மின்னணு கொள்முதல் வலைத்தளத்தை (Procurement Portal) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் நீரஜ் மித்தல், இ.ஆ.ப., தமிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண்மை இயக்குநர் திரு. அஜய் யாதவ், இ.ஆ.ப., செயல் இயக்குநர் திரு. எஸ். அருண்ராஜ், இ.ஆ.ப. ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மின்னணு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog