தனுஷ் இப்படி செய்யலாமா ? வருத்தத்தில் ரசிகர்கள்..!
தனுஷ் இப்படி செய்யலாமா ? வருத்தத்தில் ரசிகர்கள்..! தமிழ் சினிமாவில் தன் தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்துக்கொண்டிருப்பவர் தனுஷ் . எந்த வித கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதை திறன்பட செய்து ரசிகர்கள் மனதில் இடம்பெற செய்வார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், கதாசிரியர் என பன்முகத்திறன் கொண்டவர் தனுஷ். இந்நிலையில் சமீபத்தில் வெளியான இவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் தற்போது தான் நடித்து வரும் வாத்தி , திருச்சிற்றம்பலம் , நானே வருவேன் ஆகிய படங்களை மிகவும் நம்பியுள்ளார். இதைத்தொடர்ந்து துள்ளுவதோ இளமை படத்தில் நாயகராக அறிமுகமான தனுஷ் சினிமா உலகில் காலடியெடுத்து வைத்து இன்றுடன் இருபது வருடங்கள் ஆகின்றது. இதெல்லாம் நடக்குமென்று நான் கனவில் கூட நினைத்ததில்லை : தனுஷ் 2002 ஆம் ஆண்டு மே மாதம் தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை வெளியானது. இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றாலும் தனுஷ் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இருப்பினும் அதையெல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு தன் நடிப்பிலேயே கவனம் செலுத்தினார் தனுஷ். இந்த பதிவை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமா