கொட்டும் கனமழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. ஒகேனக்கலில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - சுற்றுலா பயணிகளுக்கு தடை
கொட்டும் கனமழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. ஒகேனக்கலில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - சுற்றுலா பயணிகளுக்கு தடை தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு தமிழக எல்லையான பிலிகுண்டுலு வினாடிக்கு 1500 கனஅடி நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கியவுடன், கோடை மழை அவ்வப்போது பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கோடை மழை பரவலாக பொழியத் தொடங்கியது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 7,500 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. தொடர்ந்து தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் நீர்வரத்து வினாடிக்கு 30,000 கனஅடியாக அதிகரித்து வந்தது. நேற்று காலை நீர்வரத்து குறைந்து 20,000 கனஅடியா