சென்னை:சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சினிமா துறையில் பணியாற்றும் குமார் (43), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கடந்த வாரம் அசோக் நகர் காவல் நிலையத்தில் டிரம்ஸ் வாசிக்கும் வாலிபர் ஒருவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் தனது மகளை காதலிப்பதாக கூறி மிரட்டி பணம், ஒரு சவரன் ெசயினை பறித்து ஏமாற்றியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். புகாரின்படி, அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கோடம்பாக்கம் காமராஜர் காலனியை சேர்ந்த டிரம்ஸ் வாசிக்கும் ஞானபிரகாசம் (20) என்பவருக்கும், பாட்டி வீட்டிற்கு சென்றபோது பள்ளி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காதலாக மாறியுள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஞானபிரகாசம், பள்ளி மாணவியிடம் சிறுக சிறுக ரூ.9 லட்சம் பணம், ஒரு... விரிவாக படிக்க >>