காதலன் வெறிச்செயல்! வீடு புகுந்த இளம்பெண் 18 இடங்களில் வெட்டி படுகொலை!316058271


காதலன் வெறிச்செயல்! வீடு புகுந்த இளம்பெண் 18 இடங்களில் வெட்டி படுகொலை!


தன்னைக் காதலிக்க மறுத்து விட்டு, வேறு ஒரு நபருடன் நட்பாக பழகி வந்ததால், ஆத்திரமடைந்த காதலன், இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து, சுத்தியலால் தலையிலடித்து, அவரை 18 இடங்களில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்த போலீசார் விஷ்ணுபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள் விஷ்ணுபிரியாவின் வீட்டில் இருந்து முகமுடி அணிந்த ஒரு நபர் வெளியே சென்றதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி விஷ்ணுபிரியாவின் செல்போனை ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த சியாம்ஜித் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது.

பட்டதாரியான சியாம்ஜித் தனது தந்தை நடத்தி வரும் ஓட்டலில் அவருக்கு துணையாக இருந்து வந்தார். இவர் விஷ்ணுபிரியாவை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இதற்கிடையில் விஷ்ணுபிரியாவுக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதால் சியாம்ஜித்துக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 பேரையும் கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

விஷ்ணுபிரியா வீட்டிற்கு நேற்று முன்தினம் மதியம் சென்ற சியாம்ஜித் அவரை கொலை செய்ய ஏற்கனவே கத்தியும், சுத்தியலையும் வாங்கி வைத்திருந்தார். வீட்டிற்கு சென்ற போது விஷ்ணுபிரியா வேறொரு வாலிபருடன் போனில் பேசிக் கொண்டிருந்த போது கண் இமைக்கும் நேரத்தில் சியாம்ஜித் விஷ்ணுபிரியாவின் தலையில் சுத்தியலால் தாக்கி, கத்தியை வைத்து மொத்தம் 18 இடங்களில் வெட்டியுள்ளார். பின்னர் கழுத்தையும் அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிசென்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட சியாம்ஜித்தை போலீசார் தலச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். 5 வருடங்களாக காதலித்து வந்த காதலியை 18 இடங்களில் வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

 

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் கூத்தபரம்பு அருகே உள்ள பானூர் பகுதியில் வசித்து வந்தவர் விஷ்ணுபிரியா (23). இவரது தந்தை வினோத் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். விஷ்ணுபிரியா ஒரு தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் தனது வீட்டில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

Comments

Popular posts from this blog