இரவோடு இரவாக புதிய வினாத்தாள் தயார்!! பள்ளிகள் ஆசிரியர்களுக்கு கடும் உத்தரவு!!


இரவோடு இரவாக புதிய வினாத்தாள் தயார்!! பள்ளிகள் ஆசிரியர்களுக்கு கடும் உத்தரவு!!


தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தன. பிப்ரவரி முதல் நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பிப்ரவரியில்  10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்ட திருப்புதல் தேர்வு நடைபெற்று முடிந்தது.அந்த தேர்வுக்கான  வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே வெளியானது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 


பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகுவதற்கு அடித்தளமாக மட்டுமே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது என  கல்வித்துறை அறிவித்தது. இதனையடுத்து 2வது கட்ட திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் வெளியாகி விடக்கூடாது என்பதற்காக மிகுந்த பாதுகாப்புடன் காக்கப்பட்டன. ஆனால்  2ம் கட்ட திருப்புதல் தேர்வில் இன்று நடக்க இருந்த 12ம் வகுப்பு கணித தேர்வுக்கான 2 வகையான வினாத்தாள்களும் நேற்று  சமூக வலைதளங்களில கசிந்தன.

இச்சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதிய வினாத்தாள் நேற்று இரவோடு இரவாக தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் 12ம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் மின்னஞ்சல் மூலம் இன்று காலை அனுப்பி வைக்கப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog