துரோகம் செய்த கணவனை கையும் களவுமாக பிடித்த செல்லம்மா - டாப் கியரில் செல்லும் விஜய் டிவி-யின் புது சீரியல்!


துரோகம் செய்த கணவனை கையும் களவுமாக பிடித்த செல்லம்மா - டாப் கியரில் செல்லும் விஜய் டிவி-யின் புது சீரியல்!


மக்களை ஈர்க்கும் வகையில் பல சீரியல்கள் தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. ரியாலிட்டி ஷோக்கள் எத்தனை ஒளிபரப்பானாலும், மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளவை சீரியல்கள். வெள்ளித்திரையை போலவே சின்னத்திரை சீரியல்களும் பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.

சீரியல்கள் என்றாலே ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள முதல் 2 சேனல்களில் சன் டிவி மற்றும் ஸ்டார் விஜய் டிவி தான் இருக்கின்றன. TRP ரேட்டிங் லிஸ்ட்டில் இவ்விரு சேனல்களின் சீரியல்கள் மட்டுமே மாறி மாறி முதல் 5 இடங்களை பிடிப்பது இதற்கு சாட்சி. ரியாலிட்டி ஷோக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களின் ரசனைக்கு ஏற்ப வித்தியாசமான பல ஹிட் சீரியல்களை கொடுப்பதில் விஜய் டிவி ஸ்பெஷலாக இருந்து வருகிறது.

ஸ்டார் விஜய் டிவி-யில் காற்றுக்கென்ன வேலி, பாவம் கணேசன், நம்ம வீட்டு பொண்ணு, தென்றல் வந்து என்னை தொடும், முத்தழகு, ஈரமான ரோஜாவே சீசன் 2, நாம் இருவர் நமக்கு இருவர் 2, மௌனராகம் 2, தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அண்மையில் முத்து படத்தின் சீரியல் வெர்ஷனான வேலைக்காரன் சீரியல் முடிவுக்கு வந்தது.

இதனை தொடர்ந்து மே 9 ஆம் தேதி முதல் ஒற்றை தாயின் கதையான "செல்லம்மா" என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக துவங்கி உள்ளது. வேலைக்காரன் சீரியல் தினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியல் நிறைவுற்றதை தொடர்ந்து செல்லம்மா சீரியல் இந்த நேரத்தில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. நடிகை அன்ஷிதா அக்பர்ஷா, செல்லம்மா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். தனக்கு துரோகம் செய்த கணவனை உதறிவிட்டு தனி ஆளாக இருந்து தன் பெண் குழந்தையை வளர்க்கும் செல்லம்மாவை சுற்றி இந்த சீரியலின் கதை பின்னப்பட்டு உள்ளது.

Also Read : விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும்.. சீரியல் நடிகையின் ஆசை!

இதனிடையே சீரியலின் இரண்டாவது எபிசோடான இன்று தன்னிடம் கிராமத்தில் தவறாக நடக்க முயற்சிக்கும் ஊர் பெரியவர் மற்றும் அவரது அடியாட்களிடமிருந்து பெண் குழந்தையுடன் தப்பித்து தனது கணவனை தேடி சென்னைக்கு வருகிறாள் செல்லம்மா. சரியான முகவரிக்கு வந்தும் அந்த வீட்டிலிருக்கும் பெண், செல்லம்மா கூறும் பெயரில் இங்கு யாரும் இல்லை என்று கூறுகிறாள். சோகமுடன் திரும்ப செல்ல முயலும் போது வீட்டில் மாட்டி இருக்கும் போட்டோ ஒன்றை பார்த்து அதிர்ச்சியடைகிறாள். காரணம் அந்த போட்டோவில் தன்னிடம் பேசும் பெண்ணுடன் இருப்பது தன் கணவன் தான் என்பதை அறிவதால்..

Also Read : நிறைய வலி, மெனக்கெடல்களுக்குப் பிறகு கனவு நனவானது - குட் நியூஸ் சொன்ன அனிதா சம்பத்!

உடனே மீண்டும் வீட்டிற்குள் நுழையும் செல்லம்மா அந்த பெண்ணிடம் உன் கணவன் விநாயகத்தை கூப்பிடு என்று கோபமுடன் கூறுகிறாள். அந்த பெண்ணுக்கும் ஒன்றும் புரியவில்லை, காரணம் செல்லம்மாவின் கணவன் மாணிக்கம் இந்த பெண்ணிடம் பெயரை மாற்றி போலி பெயரில் வாழ்ந்து வருவதால்.. பின்னர் ரூமை விட்டு வெளியே வரும் விநாயகம் என்கிற மாணிக்கம், தன் முதல் மனைவி செல்லம்மாவை கண்டு அதிர்ச்சியாவதுடன் இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.

Comments

Popular posts from this blog