ஆர்.டி.இ- நாளை முதல் மே 18ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்…!!


ஆர்.டி.இ- நாளை முதல் மே 18ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்…!!


தினந்தோறும் நம் தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியிடப்படும் .அந்த வகையில் தற்போது ஆர்.டி.இ பற்றி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு ஆர்.டி.இ சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நாளை முதல் மே 18ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. சிறுபான்மையற்ற, மெட்ரிக் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினர் குழந்தைகள் சேர இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கைக்கு இன்று இணையத்தில் நாளை முதல் rte.tnschools.gov.in என்ற விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள், அரசு சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Topics:,

Click to comment

Comments

Popular posts from this blog